கர்ப்பிணி பெண்களுக்கு உதவ வாட்ஸ்அப் எண்: தேசிய மகளிர் ஆணையம் அறிமுகம்..!!

கர்ப்பிணி பெண்களுக்கு உதவுவதற்காக வாட்ஸ்அப் எண்ணை தேசிய மகளிர் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 2வது அலை காரணமாக கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய முக்கியமான தேவைகளுக்கு மட்டுமே வெளியே வந்தால் போதுமானது என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்றால் கர்ப்பிணி பெண்களும் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளது.

தற்போது இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நேரத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஒருவேளை தொற்று ஏற்பட்டால் உடனடியாக மருத்தவ சிகிச்சை பெற சிரமம் ஏற்படலாம். அப்போது அவர்களும், அவர்களது வயிற்றில் வளரும் குழந்தையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இத்தகைய அவசர சூழ்நிலையில், அவசர உதவி வேண்டுமென்றால், வாட்ஸ்அப்பில் 9354954224 என்ற நம்பரை உதவிக்கு நாடலாம் என தேசிய மகளிர் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், உதவி தேவைப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு உடனடியாக உதவி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version