மழையில் ஆனந்தக் கூத்தாடிய பெண் வன அதிகாரி வைரல் வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த பகுதியில் ஒரு காட்டு தீ ஏற்பட்டது. அதை தணிக்க போராடிய குழுவில் திருமதி தாலும் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இயற்கையை ரசித்து ஒரு வன துறை அதிகாரி ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது. இதனால் நெட்டிசன்கள் பலர் இந்த வீடியோவை பார்த்து மழையில் நனைய வேண்டும் என ஆசைப்படுகின்றனர். இந்த வீடியோ மிகவும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
ட்விட்டரில் டாக்டர் யுகல் கிஷோர் மெஹந்தா என்ற பயனர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் ஒடிசாவின் சிமிலிபாலில் அமைந்துள்ள ஒரு காட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அதில் மகிழ்ச்சியுடன் ஆடி வரும் ஸ்னேஹா தால் என்ற வன வன அதிகாரி நடனமாடுகிறார்.
அந்த பகுதியில் ஒரு காட்டு தீ ஏற்பட்டது. அதை தணிக்க போராடிய குழுவில் திருமதி தாலும் ஒருவராக இருந்தார். அங்கு மழை பெய்த போது அவரது முகத்தில் தோன்றிய நிம்மதியும் அவர் நடனமாடிய விதமும் அவர் மகிழ்ச்சியாக இருப்பதை வெளிப்படுத்துவதாய் இருந்தது. அவர் நடனமாடும் வீடியோவானது மார்ச் 10 அன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. இது பலரது இதயங்களை வென்ற வீடியோவாக இருந்தது. இது டிவிட்டரில் 1439 ரீடிவிட் மற்றும் 6415 லைக்குகளை பெற்றுள்ளது. மேலும் 1,67,700 பார்வைகளை இந்த வீடியோ பெற்றுள்ளது.