மளிகை கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய விஜய் மக்கள் இயக்க மாஜி மாவட்ட செயலாளர்

மளிகை கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய விஜய் மக்கள் இயக்க மாஜி மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார்.

பெருங்களத்தூர் அருணகிரி நகரை சேர்ந்தவர் பாலமுருகன், இவர் அதே பகுதியில் ஒரு மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 12ம் தேதி இவரது இவரின் கடைக்கு வந்த ஒரு ஆசாமி, ‘‘பெருங்களத்தூரை சேர்ந்த ஜெயராமன் உங்களிடம் ₹40 ஆயிரம் மாமூல் வாங்கி வரும்படி கூறினார் என தெரிவித்துள்ளார்.

அதற்கு பாலமுருகன் பணம் தர மறுத்தால், நீ காசு தராவிட்டால் உன்னை கடையை நடத்த விடமாட்டோம் எனவும் ஜெயராமனுக்கு எல்லா இடத்திலும் அடியாட்கள் மற்றும் ரவுடிகள் உள்ளனர் எனவும் கூறி அவரை மிரட்டினார் மேலும் உங்களுக்கு பல்வேறு வகையில் தொல்லை தருவோம்,’’ என அச்சுருதுளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பாலமுருகன் இதுகுறித்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

அதில், விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளரான குண்டுமேடு பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் தான் இந்த மளிகை கடையில் மாமூல் கேட்டு மிரட்டியது தெரிந்தது. மேலும் நேற்று அவரை இந்த புகாரின் அடிப்படையில் கைது செய்தனர். பின்னர், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஜாமீனில் விடுவித்தனர். மேலும் ஜெயராமனை தேடி வருகின்றனர்.

Exit mobile version