துபாய் மீட்பு விமானத்தில் பேரீச்சம் பழத்தில் தங்கம் கடத்தல் செய்தவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துபாயிலிருந்து பிளை துபாய் மீட்பு விமானம் நேற்று சென்னை வந்தது. அதில் பயணம் செய்து வந்த பயணிகள் அனைவரையும் சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அவ்வாறு சோதனை செய்ததில் ஒருவர் சந்தேகிக்கும்படி இருந்துள்ளனர். அவர் திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை பகுதியை சேர்ந்த முகமது அப்பாஸ் என்பவர் ஆவார். அவரின் உடைமைகளை சோதனை செய்து பார்த்ததில் சூட்கேசுக்குள் மறைத்து வைத்திருந்த பதப்படுத்தப்பட்ட குங்குமப்பூ பாக்கெட்கள் இருந்தது. அதிகாரிகள் அதனை கைப்பற்றினர். அதன் எடை 5.6 கிலோ. சர்வதேச மதிப்பு ரூ.13.4 லட்சம். பின்னர் முகமது அப்பாசை கைது செய்தனர்.
இதேபோல், துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பாலமுருகன் என்ற மீட்பு பயணியை சோதனை செய்தபோது 20 கிராம் எடையுடைய 2 தங்கக்கட்டிகளை அவர் கொண்டுவந்த பேரீச்சம் பழங்களுக்கு நடுவில் மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது. அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். அதன்மதிப்பு ரூ.2.1 லட்சம். தொடர்ந்து பாலமுருகனை கைது செய்தனர்.
இதனால் மற்ற நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களை நன்றாக சோதனை செய்து வருகின்றனர். மேலும் இதுபோல் நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுத்தும் வருகின்றனர்.