தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழைக்காலமானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்தின் பெருவாரியான மாவட்டங்களில் கனமழை பெய்தது.
கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவு மழையானது பல மாவட்டங்களில் பதிவாகி வருகிறது. கனமழை காரணமாக பல நகரங்களையும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் பாம்புகள் தென்படுகின்றன. சில ஆற்றுக் கரையோர பகுதிகளில் முதலைகளின் நடமாட்டமும் உள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சமடைந்துள்ளனர்.
மழை காலங்களில் இன்றுள்ள டிரெண்டுக்கு ஏற்றாற்போல பல வைரல் வீடியோவும் வெளியாகி வருகிறது. இந்நிலையில், வீட்டிற்குள் தேங்கிய நீரில், சோப்பு போட்டு டி.வி பார்த்துக்கொண்டே நபரொருவர் சோப்பு போட்டுக் குளிக்கும் காணொளிகள் இணையத்தில் வெளியாகி நகைப்புக்குள்ளாகி வருகிறது.