அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பற்ற முறையில் நடந்த ஒரே தேர்தல் 2020 தேர்தல் தான் என்று டிரம்ப் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் :
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை டிரம்ப் ஏற்க மறுத்து வருகிறார்.தொடர்ந்து டிரம்ப் ஜோ பைடன் வெற்றி பெற்றது செல்லாது என்றும், மறு வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என டிரம்ப் பிரசார குழு சார்பில் அந்தந்த மாகாண நீதி மன்றங்களில்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகளிலும் டிரம்ப் தரப்பு தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வருகிறது.
இந்தநிலையில் சமீபத்தில் நடந்த விஸ்கான்சின் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடன் டிரம்பை விட அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் இருந்தார்.இதையடுத்து டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் “அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பற்ற முறையில் நடந்த ஒரே தேர்தல் 2020 தேர்தல் தான்” என்றும்,“தேர்தலில் பெரிய அளவில் மோசடிகள் நடந்துள்ளது . ஒபாமாவை விட ஜோ பைடன் கருப்பின சமூகத்திடம் இருந்து நிச்சயமாக 8 கோடி வாக்குகளை அவர் பெறவில்லை.அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்” என்று கருத்துகளை அவர் தெரிவித்து வருகிறார்.