தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,766 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் பலியானோர் எண்ணிக்கை 2,454 ஆக அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 3.38 லட்சத்தை கடந்துள்ளது.
பொது சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 5,950 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 3,585 பேர். பெண்கள் 2,365 பேர். தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 38,055 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஆண்கள் 2 லட்சத்து 3,838 பேர். பெண்கள் 1 லட்சத்து 34 ஆயிரத்து 188 பேர். மாற்றுப்பாலினத்தவர்கள் 29 பேர். இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 16,385 பேர். 13-60 வயதுடையவர்கள் 2 லட்சத்து 78 ஆயிரத்து 903 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 42 ஆயிரத்து 767 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 70,450. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 37 லட்சத்து 11,246. தமிழகத்தில் இன்று மட்டும் 68,444 தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 35 லட்சத்து 81,939 தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று தனியார் மருத்துவமனைகளில் 39 பேரும், அரசு மருத்துவமனைகளில் 86 பேரும் என 125 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 5,766 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 17 பேர். ஏற்கனவே இணை நோய்கள் உள்ளவர்கள் 108 பேர். நேற்று மட்டும் 6,019 பேர் மருத்துவமனைகளிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக, 2 லட்சத்து 78 ஆயிரத்து 270 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 54 ஆயிரத்து 19 பேர் (தனிமைப்படுத்துதல் உட்பட) சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 650 ஆக உயர்ந்துள்ளது. இன்று 1,009 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 2,698 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்று 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 2,454 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 11 ஆயிரத்து 498 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் அரசு சார்பாக 62 மற்றும் தனியார் சார்பாக 73 என மொத்தம் 135 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்றைய நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,38,055 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்
அரியலூர் – 1,792, செங்கல்பட்டு – 20,911, சென்னை – 1,16,650, கோயம்புத்தூர் – 8,967, கடலூர் – 6,690, தருமபுரி – 1,009
திண்டுக்கல் – 4,755, ஈரோடு – 1,445, கள்ளக்குறிச்சி – 4,919, காஞ்சிபுரம் – 13,876, கன்னியாகுமரி – 7,492, கரூர் – 1,012, கிருஷ்ணகிரி – 1,658, மதுரை – 12,764, நாகப்பட்டினம் – 1,570, நாமக்கல் – 1,221, நீலகிரி – 1,057, பெரம்பலூர் – 938, புதுக்கோட்டை – 4,177, ராமநாதபுரம் – 4,015, ராணிப்பேட்டை – 8,358, சேலம் – 5,917, சிவகங்கை – 3,374, தென்காசி – 3,905, தஞ்சாவூர் – 4,888, தேனி – 9,909, திருப்பத்தூர் – 2,013, திருவள்ளூர் – 19,870, திருவண்ணாமலை – 8,720, திருவாரூர் – 2,319, தூத்துக்குடி – 9,964, திருநெல்வேலி – 7,522, திருப்பூர் – 1,531, திருச்சி – 5,867, வேலூர் – 8,498, விழுப்புரம் – 5,248, விருதுநகர் – 11,183, விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் – 875, விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) – 748, ரெயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 428, மொத்தம் – 3,38,055.