திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பை தரக்கூடிய நூல் என பிரதமர் மோடி மீண்டும் புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் மோடி சமீபகாலமாக எங்கு சென்றாலும் திருக்குறளை மேற்கோள் காட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில், சீன அத்துமீறலையடுத்து எல்லை பகுதியான லடாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, “மறாமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே ஏமம் படைக்கு” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
அதாவது, வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசின் நம்பிக்கைக்கு உரியவராதல் எனும் நான்கும் படைக்கும் காவல் அரண்கள் என்பது அதன் அர்த்தமாகும்.
இந்த நிலையில், எழுத்தாளர் மாலனின் கட்டுரையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, திருக்குறள் உயர்ந்த சிந்தனைகள், உன்னத குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துகளை உள்ளடக்கிய பொக்கிஷமாகும். திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையையும், ஒளியையும் பரப்பிடும் சக்தியை கொண்டவை. நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளை படித்து பயன்பெறுவார்கள் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.