பாஜகவில் உட்கட்சி பூசல் என்ற பேச்சுக்கே இடமில்லை – அண்ணாமலை

பாஜகவை பொறுத்தவரை உட்கட்சி பூசல் என்ற பேச்சுக்கே இடமில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தை பொறுத்தவரை எந்த உட்கட்சி பிரச்சனையும் இல்லை எனவும், நல்ல சமுதயத்தை உருவாக்க எங்கள் சித்தாந்தத்தில் நாங்கள் உள்ளோம்” எனவும் கூறினார். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தை போல, சில கட்டுப்படுகளுடன் சதுர்த்தி ஊர்வலம் நடத்த அனுமதி கோரியுள்ளதாகவும் தெரிவித்தார். பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கே.டி ராகவன் விவகாரத்தில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Exit mobile version