உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் தேசிய சட்ட பல்கலைக்கழகம் மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் புதிய கட்டடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.
2022ம் ஆண்டு உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் தேர்தலை சந்திக்க உள்ளது. ஆனால், இதில் உத்திரபிரதேச மாநில தேர்தல் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம் உத்தரபிரதேசத்தில் யார் ஆட்சி அமைக்கிறார்களோ அவர்களே மத்தியிலும் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புகள் இருக்கும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கும் கருத்து ஆகும்.
இந்நிலையில், பல்வேறு திட்டங்களை தேர்தலுக்கு முன்னதாக மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக உத்திரபிரதேச மாநிலத்தின் அலகாபாத்-ல் உயர்நீதிமன்ற புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த். காலை 11 மணிக்கு நடைபெரும் இந்நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா, அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி , மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ராஜுஜி , உத்தரபிரதேச ஆளுநர் அனந்திப்பென் பட்டேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இன்று புதிதாக அடிக்கல் நாட்டப்பட உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் பயன்பாட்டுக்காக 2,600 அறைகள், அடிட்டோரியம், தாராளமான பார்க்கிங் வசதி அமைக்கப்பட உள்ளதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து , ஜல்வா பகுதியில் தேசிய சட்ட பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் விழா என்பதும் நடைபெறவுள்ளது.
குடியரசுத்தலைவரின் வருகையொட்டி அலகாபத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது;மேலும், கடந்த 3 மாதங்களில் இது குடியரசுத்தலைவரின் 3வது பயணம் ஆகும், ஏற்கனவே குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கான்பூர் மற்றும் அயோத்திக்கு 2 முறை பயணம் மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.