குழந்தைக்காக மின்னல் வேகத்தில் செயல்பட்ட தாய் …!!

குழந்தைக்காக மின்னல் வேகத்தில் செயல்பட்ட தாய் நெகிழ்ச்சி சம்பவம் வைரலாகி வருகிறது.

தாய் பாசத்துக்கு பணம் ஒரு பொருட்டாகவும், தடையாகவும் இருந்ததே கிடையாது. அதனால் தான் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்த வாங்கலாம் அம்மாவை வாங்க முடியுமா என பாடல் வைத்தார்.அந்த அளவுக்கு தாய் பாசம் உயர்ந்தது. அப்படியே கண் முன்பு கொண்டுவந்து நிறுத்துவது போல் இப்பொது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஒரு உணவகம் ஒன்றின் மாடியில் தாயும், குழந்தையும் நின்றி கொண்டிருந்தனர். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் குழந்தை மாடியில் இருந்த சிறிய இடைவெளி வழியே நுழைத்தது. உடனே குழந்தை கீழே விழ போனது. இதை அருகில் இருந்து கவனித்த தாய் மின்னல் வேகத்தில் செயல்பட்டு குழந்தையின் ஒரு காலை பிடித்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அந்த தாய் நடத்தும் போராட்டத்தை பார்த்துவிட்டு அவர்களும் சேர்ந்து கைப்பிடித்து குழந்தையை தூக்கிவிட்டனர். மின்னல் வேகத்தில் செயல்பட்டு தாய், குழந்தையை காப்பாற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version