மாமியாரையும் மனைவியையும் பகையால் கொன்ற கணவர் நடுரோட்டில் கத்தி வெட்டு நிகழ்ந்துள்ளது.

கடலூர் முதுநகர் சலங்கைகார தெருவைச் சேர்ந்த பூங்கொடி மற்றும் அவரது மகள் மீனா இருவரும் சாலையில் குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மீனாவின் கணவர் நம்பிராஜ் இருவரையும் கத்தியால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடினார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தாய், மகளின் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மீனாவும் அவரது கணவர் நம்பிராஜும் கடந்த ஒரு வருட காலமாக பிரிந்து வாழ்ந்து வந்ததும், குடும்ப தகராறு இதன் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில் நடுரோட்டில் வெட்டியுள்ளார்.
மீனாவையும் அவரது தாய் பூங்கொடியையும் நம்பிராஜ் கொலை செய்ததும் தெரிய வந்தது. வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தப்பியோடிய நம்பிராஜனை தேடி வருகின்றனர்.