வங்கி மாதத் தவணை விவகாரத்தில் ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டியில்லை என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர்க் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை மீதான கடன் உள்ளிட்ட அனைத்துத் தவணைகளையும் செலுத்துவதில் இருந்து கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனாலும் சிலபல வங்கிகளில் அதை பேரின்பற்றாமல் காலம் தாழ்த்தி கடன் செலுத்தினால் வட்டி கூட்டி வாங்கிடப்படும் என கூப்பிட்டது. இதை பல்வேறு தரப்பினரும் இதை எதிர்த்தனர். அரசு ஓன்று கூறுகிறது அனால் நடப்பது அதற்கு ஏற்றுமாறு நடக்கின்றது. இதனால் வட்டி வாங்க கூடாது எனவும் சிலர் கூறி வந்தனர்.
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஆகஸ்ட் 31-ம் தேதிவரை வாராக் கடனாக அறிவிக்கப்படாத வங்கிக் கணக்குகள் அனைத்தையும், மறு உத்தரவு வரும் வரை வாராக் கடனாக அறிவிக்கக் கூடாது என உத்தரவிட்டது.
மேலும் இதை தொடர்ந்து இந்த நிலையில், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு, வங்கி மாதத் தவணை விவகாரத்தில் ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டியில்லை என தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.