குடிக்க பணம் தராத தன் பாட்டியை வெட்டி கொலை செய்த பேரன்..!!

குடிக்க பணம் தராத தன் பாட்டியை வெட்டி கொலை செய்த பேரன் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வேலூர் மாவட்டம், காட்பாடி தாராபடவேடு திருவள்ளூர் தெரு பகுதியை சேர்ந்தவர் இவருடைய பேரன் அஜித் அஜித்திற்கு குடிப்பழக்கம் உள்ளது அடிக்கடி குடிப்பதற்கு பணம் கேட்டு  பாட்டியை தொந்தரவு செய்து வைத்துள்ளார். இருவருக்கும் அடிக்கடி சண்டையையும் வந்துள்ளது. சம்பவத்தன்று வழக்கம் போல் அஜித் பாட்டியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்திருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த அஜித் நேற்று நள்ளிரவு பாட்டி சாந்தி கத்தியால் கழுத்தை வெட்டி கொடூரமாக கொலை செய்தனர். கொலை செய்து விட்டு அஜித் வீட்டை விட்டு தலைமுறைவாகிவிட்டார்.

 பாட்டி வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டார் உள்ளே சென்ற பார்த்தபோது பாட்டி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். காட்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்பாடி போலீசார் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவான அஜித்தை தீவிரமாக தேடி வருகின்றனர். குடிக்கு பணம் தராததால் பாட்டியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version