7 மாவட்டங்களில் பேருந்துகள் நிறுத்தம் செய்ததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஆங்காங்கே உள்ள மக்கள் அவசர அவசரமாக கிடைக்கும் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை, புதுகோட்டை, நாகை மற்றும் கடலூர் பேருந்து நிலையங்களில் இன்று 1 மணி அளவில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டது.
குறிப்பாக நாகை மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக்கு பேருந்துகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் மொத்தமாக 360 பேருந்துகள் பயணிக்கின்றன குறிப்பாக வேதாரண்யம், மயிலாடுதுறை, தாரங்கம்பாடி என பல்வேறு பகுதிகளுக்கு இயக்கபட்டு வந்த இந்த 360 பேருந்துகளில் 60 சதவீத பேருந்துகள் மட்டுமே மதியம் ஒரு மணி வரை இயங்கி வந்தது. மேலும் மதியம் ஒரு மணியோடு அணைத்து பேருந்துகளும் பணிமனைக்கு வர உத்தரவிடப்பட்டு முழு பேருந்து சேவைகளும் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது.
இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னையிலிருந்து காஞ்சிபுரம், மஹாபலிபுரம், தாம்பரம் போகும் பேருந்துகள் நிறுத்தப்பட்டு பணிமனைக்கு திரும்புகிறது. தற்போது பேருந்து நிலையத்தில் இருக்கும் பயணிகளுக்காக மட்டும் சில பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் சில பேருந்துகள் இன்னும் இயங்கி வருகின்றது.