சிறுமிகள் நிர்வாண ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட கொடூரம்!!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள தமோ மாவாட்டத்தில் பனியா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நீண்ட காலமாக மழை பொய்த்துப் போனதால் விவசாயம் உள்ளிட்ட பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மழை வேண்டி இந்த கிராமத்தில் உள்ள 6 சிறுமிகளை நிர்வாணமாக அழைத்துச் சென்று பூஜை நடத்தப்பட்டுள்ளது. சிறுமிகளின் கைகளில் மரத்தடியைக் கொடுத்து, அதில் தவளைகளைக் கட்டிவைத்திருந்தனர்.

நிர்வாணமாக இருந்த சிறுமிகளைச் சுற்றி பெண்கள் பஜனைகள் பாடியடி ஊர்வலம் மேற்கொண்டிருந்தனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து இரண்டு வீடியோக்கள் வெளியான நிலையில் மத்தியப் பிரதேச போலீஸார் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தியுள்ளது.

Exit mobile version