‘இனியாவது நீட் பற்றிய உண்மையை மாணவர்களுக்கு உணர்த்துங்கள்’ – எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கூளையூரில் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த மாணவன் தனுஷின் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் உயிரிழந்த மாணவன் தனுஷின் உடலுக்கு முன்னாள் முதலமைச்சரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் தொடர்ந்து மகனை இழந்த துக்கத்திலிருந்த மாணவனின் பெற்றோருக்கு அவர் ஆறுதல் கூறினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இனியாவது மாணவச் செல்வங்களுக்கு நீட் தேர்வு பற்றிய உண்மை நிலையை உணர்த்துங்கள். தேர்தல் பரப்புரையின்போது நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக பரப்புரை செய்தது” என்று குற்றம் சாட்டினார்.

இதனிடையே தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷின் உடலுக்கு திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மாணவர் தனுஷின் பெற்றோருக்கு உதயநிதி ஆறுதல் தெரிவித்தார்.

Exit mobile version