சென்னையில் இருந்து இயக்கப்படும் தேஜஸ் சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால்:-
சென்னை எழும்பூர் – மதுரை (வண்டி எண்: 02613) இடையே இயக்கப்படும் தேஜஸ் சிறப்பு ரயில், காலை 6 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மதியம் 12.20 மணிக்கு மதுரை சென்றடையும் வகையில் இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தேஜஸ் சிறப்பு ரயில் நாளை முதல் 6 மணிக்கு பதிலாக 6.30 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதியம் 12.50 மணிக்கு மதுரை சென்றடையும். மேலும் அந்த ரயில் திருச்சிக்கு காலை 10.30 மணிக்கும், கொடைக்கானல் ரோடுக்கு காலை 11.53 மணிக்கும் வந்தடையும்.
ஆனால் மறுமார்க்கமாக மதுரையில் இருந்து எழும்பூருக்கு வரும் தேஜஸ் சிறப்பு ரயிலின் புறப்படும் நேரத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.