தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தனது அடுத்த படத்தில் அரசியல்வாதியாக நடிக்க உள்ளாராம்.
தமிழ் சினிமாவில் சூர்யா மிகவும் சிறந்த நடிகர். அவர் பல நல்ல படங்களை நடத்திருக்கிறார். என்.ஜி.கே. எனும் படத்தில் இவர் அரசியல் வாதியாக நடித்து பட்டைய கிளப்பினார். மேலும் அவரின் சூரரை போற்று படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகா இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களுள் ஒருவர் பாண்டிராஜ். இவரது இயக்கத்தில் வெளியான வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, கதகளி, இது நம்ம ஆளு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் கடைசியாக சிவகார்த்திகேயனை வைத்து நம்ம வீட்டு பிள்ளை படத்தை இயக்கி இருந்தார். இப்படமும் சூப்பர் ஹிட் ஆனது.
இப்போது இவர் அடுத்த படத்திற்கு ஆதி போடு இருக்கிறார். இந்நிலையில், இயக்குனர் பாண்டிராஜ் அடுத்ததாக சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. அரசியல் கதையம்சம் கொண்ட இப்படத்தில் சூர்யா அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனை இருவரின் ரசிகர்களும் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவர் ஏற்கனவே செல்வராகவன் படத்தில் நடந்திருந்தாலும் இந்த படம் வேற மாதிரியான அரசியலை கையாளப்போவதாக கூறப்படுகிறது