கன்னபடத்தை தமிழில் ரீமேக் செய்யும் சுந்தர் சி
கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற ‘மாயாபஜார்’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார் சுந்தர் சி. இராதகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் க்ரைம் காமெடி வகையை சேர்ந்தது இந்தப் படம்.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்திருப்பவர் இயக்குநர் சுந்தர் சி. குடும்பத்துடன் ரசித்து பார்க்கும் வகையில் ஃபேமிலி டிராமா படங்களை காமெடி ஜானரில் கொடுப்பவர். இவரின் அன்பே சிவம், அண்ணாமலை,அரண்மனை 1 ,2 போன்ற படங்களை இயக்கினவர். இந்த படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை உண்டாக்கிய படம்.
மேலும் இப்போது ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிக்க இருந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போனது. தற்போது இப்படத்தில் பேயாக நடிப்பது ஆர்யா என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இவரின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தை சுந்தர்.சி தயாரிக்கிறார். அவரின் முன்னாள் உதவி இயக்குநர் பத்ரி இயக்குகிறார்.