நீட் தேர்வில் தோல்வி அச்சம் காரணமாக அரியலூரை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அரியலூர் விக்கிரமங்கலம் அருகே நீட்தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கருணாநிதி என்பவரின் இரண்டாவது மகளான கனிமொழி, தேர்வு எழுதிய நிலையில் தோல்வி பயம் காரணமாக தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஏற்கனவே நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.