சிவாஜியின் 93 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை.
சிவாஜியின் 93 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை.
நடிப்புப் பல்கலைக்கழகமாக விளங்கில் பிரான்ஸ் தேசத்தில் செவ்வாலியே விருதுபெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் அவரது திருவுருபப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பேரறிஞர் அண்ணானல் அடையாளம் காணப்பட்டும் சிவாஜி என்று பெரியாரால் பெயர் சூட்டப்பட்ட சிவாஜி கணேசன் தனது உச்சகட்ட நடிப்பால் எந்தக் கதாப்பாத்திரத்திற்கும் ஜீவியத்தன்மை கொடுத்துவிடுவார்.
அவரது முதல் படமான பராசக்தியில் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்து அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களில் நடுத்து நடிகர் திலகமான உயர்ந்தார்.
அனைத்து மொழுத்திரைக் கலைஞர்களும் மதிப்புடன் நினைவுகூறப்படும் நடிப்பில் என்ஸைக்கிளோபிடீயா அவர் என்று பகரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.
இந்நிலையில் இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை அடையாறு மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசன் படத்திற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதைதூவி மரியாதை செலுத்தினர்.