இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் 35 வயதான ஷிகர் தவான். தவானின் 10 வருட திருமண வாழ்க்கை முடிவிற்கு வந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது மனைவி ஆயிஷா முகர்ஜியை விவாகரத்து செய்து விட்டதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம் 10 ஆண்டுகளாக நீடித்து வந்த அவர்களின் திருமண பந்தம் முடிவிற்கு வந்துள்ளது.
ஷிகர் தவானுடன் விவாகரத்து ஆகியிருப்பதாக அவருடைய மனைவி ஆயிஷா முகர்ஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். ஷிகர் தவான் இதனை இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பாலோயர்களுக்காக உருக்கமான பதிவின் மூலம் ஆயிஷா தனது உணர்வுகளை வெளிக்காட்டியுள்ளார்.
ஆயிஷா ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாவார். ஆயிஷாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் அவரின் முதல் கணவரை பிரிந்து கடந்த 2012ம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் சோராவர் எனும் மகன் உள்ளார்.
ஹர்பஜன் சிங்கின் நண்பர் வட்டத்தில் இருந்த ஆயிஷாவை, ஷிகர் தவான் பேஸ்புக்கில் முதல் முறையாக பார்த்தார். அவருடைய புகைப்படங்களை பார்த்து காதல் வயப்பட்டு பின்னர் அறிமுகமாகி அது திருமணம் வரை சென்றது. முதலில் தவானின் பெற்றோர் இத்திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் தவான் அவர்களை சமாதானம் செய்து சம்மதிக்க வைத்தார். ஆயிஷாவின் குடும்பத்தினர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர் பின்னர் இவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறிவிட்டனர்.
தவானின் மனைவி ஆயிஷா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில் “முதலில் விவாகரத்து என்பது ஒரு அழுக்கான வார்த்தை என, எனக்கு இரு முறை விவாகரத்து ஆகும் வரை நினைத்துக் கொண்டிருந்தேன். வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை, எவ்வளவு அர்த்தங்கள் அதில் புதைந்திருக்கின்றன என்பதை முதல் முறை விவாகரத்து ஆகும் போது புரிந்து கொண்டேன். முதல் முறை விவாகரத்து ஆகும் போது மிகவும் பயந்தேன் நான் மிகவும் தவறான ஒரு விஷயத்தை செய்வதாகவும், தோல்வி அடைநதவளாகவும் உணர்ந்தேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.