17 வயது சிறுமி… 28 பேர்… தந்தை உட்பட ஏழு பேர் கைது!!

தனது தந்தை உட்பட 28 பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 வயது சிறுமி குற்றம் சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் லலித்பூரில் இருந்து ஒரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 17 வயது சிறுமியை அவரது தந்தை உட்பட 28 பேர் மீது பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், லலித்பூர் போலீஸார் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து 7 பேரை கைது செய்துள்ளனர். 7 பேரில் சிறுமியின் தந்தை மற்றும் அவரது இரண்டு மாமாக்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த சில வருடங்களாக தனது தந்தை மற்றும் உள்ளூர் அரசியல் தலைவர்கள் உள்பட 28 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக 17 வயது சிறுமி குற்றம் சாட்டியுள்ளார். தான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது தனது தந்தை தனது மொபைலில் ஆபாசப் படங்களைக் காட்டி உடல் ரீதியான உறவை ஏற்படுத்தியதாக தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் அடங்குவர்கள். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version