போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ராகிணி திவேதி கைது செய்யப்பட்ட நிலையில், இன்னொரு பிரபல நடிகையும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. போதை மாத்திரைகளை பயன்படுத்திய விவகாரத்தில் நடிகை ராகிணி திவிவேதி முன்னதாக கைதி செய்யப்பட்டார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை தொடர்ந்து பாலிவுட்டில் நெப்போடிசம் பிரச்சனைக்கு மேல், தற்போது போதைப் பொருள் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. நடிகை கங்கனா ரனாவத் முக்கிய நடிகர்களின் பெயர்களை குறிப்பிட்டே சர்ச்சையை பெரிது படுத்தியுள்ளார். பாலிவுட் நடிகர்கள் சிக்குவார்கள் என பார்த்து கொண்டிருந்த நிலையில், கன்னட நடிகர்கள் போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை தொடர்ந்து பாலிவுட்டில் நெப்போடிசம் பிரச்சனைக்கு மேல், தற்போது போதைப் பொருள் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. நடிகை கங்கனா ரனாவத் முக்கிய நடிகர்களின் பெயர்களை குறிப்பிட்டே சர்ச்சையை பெரிது படுத்தியுள்ளார். பாலிவுட் நடிகர்கள் சிக்குவார்கள் என பார்த்து கொண்டிருந்த நிலையில், கன்னட நடிகர்கள் போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
பிரபல கன்னட நடிகை ராகிணி திவேதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை மற்றொரு பிரபல நடிகையான சஞ்சனா கல்ரானியும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கன்னட திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் (CCB) அதிகாரிகள் இந்த கைது வேட்டையை நடத்தி உள்ளனர்.
நடிகை நிக்கி கல்ரானியின் சகோதரி தான் சஞ்சனா கல்ரானி என்பது குறிப்பிடத்தக்கது. சொகடு எனும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஒரு காதல் செய்வீர் என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். தொடர்ந்து ஏகப்பட்ட தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள இவர், போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது
கன்னட திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகைகளே போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கி உள்ள நிலையில், ஏகப்பட்ட பிரபல நடிகர்களும் இந்த விவகாரத்தில் சிக்குவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. சங்கிலி தொடர் போல விசாரணை வீரியம் அடைய அடைய ஒவ்வொருவராக சிக்கி வருவதால், கன்னட திரையுலகமே கதிகலங்கி போயுள்ளது. இதுவரை 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.