பா.ஜனதாவுக்கும், ராகிணி திவேதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், மேலும் அவர் போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ளதால் அவரை கட்சியில் சேர்த்துகொள்ள பா.ஜனதா தலைவர்களுக்கு விருப்பம் இல்லை என தெரியவந்துள்ளது.
போனதை பொருள் கடத்தியதாகவும் அதை கடத்திய கும்பலுடன் தொடர்பு இருந்ததாகவும் ராகிணியை குற்றம்சாட்டி வருகின்றார்கள். இதனால் அவர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விசாரணையும் நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகை ராகிணி திவேதி கர்நாடக பா.ஜனதாவில் இணைய முயன்றதாகவும், இதற்காக அவர் பா.ஜனதா தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இவருக்கு தற்போது பட வாய்ப்புகளும் இல்லாததால் தற்போது அரசியலில் குதிக்க உள்ளதாக பேச்சு அடிப்பட்டு வருகின்றது.
இதற்காக அவர் கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், மந்திரி அசோக், அரவிந்த் லிம்பாவளி எம்.எல்.ஏ. ஆகியோருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நேரத்தில் தான் போதைப்பொருள் விவகாரத்தில் ராகிணி திவேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
பா.ஜனதாவுக்கு ஆதரவாக ராகிணி பிரசாரம் செய்ததால் அவர் பா.ஜனதாவை சேர்ந்தவர் என்று குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இதை முற்றிலும் மறுத்த பா.ஜனதா தலைவர்கள், பா.ஜனதாவுக்கும், ராகிணி திவேதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினர். இதன்மூலம் அவரின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.