பெயருக்கேற்றாற்போல், நல்ல நேர்மறையான கதைகளுடன் நம் மனதை சந்தோஷப்படுத்தவும், நம்பிக்கையை விளைவிக்கும் படியும் எடுக்கப்பட்டுள்ளது.
- இளமை இதோ இதோ
இயக்குனர்: சுதா கொங்கரா
காதலுக்கு வயதில்லை என்பதே முக்கிய கருத்து.
இளமை காலத்துல ஒண்ணா இருந்தவங்க..ரொம்ப வருஷம் கழிச்சு சந்திக்கறாங்க. நடுல அவங்களுக்கு கல்யாணம் ஆகி, பிள்ளைகள், பேரன் பேத்தி கூட வந்தாச்சு. அவங்களோட கணவன்/மனைவியை இழந்தவங்க. அதனால அவங்களோட காதலை மறைச்சு வெச்சு வீட்ல பொய் சொல்லிட்டு அந்த சந்திப்பு ஏற்பாடு பன்னிருக்காங்க. அப்போ ஊரடங்கு வந்துடவே வெகு நாட்கள் ஒரே வீட்டில் சேர்ந்து தங்கறாங்க.
குட்டி குட்டி சண்டைகள்,அதுக்கப்புறம் சாரி சொல்லிட்டு ஒண்ணா ஆகறது இதெல்லாம் பாக்க ரொம்ப அழகு. பிரச்சனைகள், அவங்களோட குடும்பத்தினர் பண்ற போன்..இந்த மாதிரி நேரங்கள்ள அவங்க நிஜத்துக்கு திரும்பறா
அவங்க மட்டும் இருக்கறப்போ, சண்டை போடாமல் அன்பாய் இருக்கிறப்போ அவங்க மனசு இன்னும் இளமையவே தான் உணருது. அதனால இளைய நடிகர்கள் அந்த காட்சிகள்ள நடிக்கிறாங்க. இந்த கான்செப்ட் பெரிய பிளஸ்.
ஒவ்வொரு தருணத்தோட உணர்வை பொறுத்து அவங்க மனசு நிஜத்துக்கும், பழைய காலத்துக்கும் மாறும் என்ற கருத்தை இரு வேறு ஜோடி நடிகர்கள் வெச்சு எடுத்துருக்காங்க. டைரக்டருக்கு ஸ்பெஷல் பாராட்டு.
- அவனும் நானும், அவளும் நானும்
இயக்கம்: கெளதம் வாசுதேவ் மேனன்
தன் அம்மாவை பல வருடங்கள் ஒதுக்கி வைத்தவர், கல் நெஞ்சக்காரர் என்று நினைத்து அவர் மீது வெறுப்பா இருக்கற பேத்தி. ஊரடங்குல அவர் கூட தான் இருக்கணும் என்று சூழ்நிலை. கொஞ்சம் கொஞ்சமாக அந்த தாத்தாவின் நல்ல குணம் அந்த பெண்ணைக் கவர்ந்து, அவர் நிஜமாகவே அம்மாவை ஒதுக்கி வைத்தாரா, என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்கிறாள் அந்த பெண். உண்மை தெரிஞ்சதும், அவருக்காக வருத்தப்பட்டு, அவரை சந்தோஷ படுத்தணும் என்று ஒரு சிறு முயற்சி செய்கிறாள்.
தாத்தா-பேத்தியின் அழகிய பாசமும், அந்த பெரியவரின் மனதில் இருக்கும் ஏக்கமும் கதையின் பிளஸ்.
எம்.எஸ்.பாஸ்கர் தாத்தாவாக வாழ்ந்திருக்காரு. ப்பா, மனுஷன் நடிப்புல கிங். அவர் அழும் காட்சியில், நமக்கே சிலிர்த்து போகுது.
- காபி எனி ஒன்? (Coffee Anyone ?)
இயக்கம்: சுஹாசினி
கோமாவில் இருக்கும் அம்மா. வெளி நாட்டிலிருந்து வரும் அவரது 2 பெண்கள். அவரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வாழும் 3ஆவது பெண். என்னனவோ செய்து அம்மாவை சரிசெய்ய பார்க்கிறார்கள். முடியவில்லை.
தன் மனைவி வீட்டிலேயே தான் இருக்க வேண்டும் என்று கூறி, ஏக்கத்துடன் வாழ்கிறார் அப்பா. அவருடன் சேர்ந்து இருப்பது போன்றே குறுக்கெழுத்து விளையாடுவதும், காபி குடிப்பதும் நெகிழிச்சியான தருணங்கள்.
பல வருஷம் கழிச்சு, திட்டமிடாமல் பிறந்து விட்டதால், நான் பொறந்திருக்கவே கூடாது. நான் ஒரு மிஸ்டேக் என்று தன் மனசுல புதைந்த வருத்தத்தை நேர்த்தியாக வெளிப்படுத்தறாங்க 3வது பெண்ணாய் வரும் ஸ்ருதி ஹாசன். தன் வேலை மீது விருப்பம் இல்லாமல் வீட்டை விட்டு துரத்திய அம்மாவை நேரில் கூட பார்க்க வராமல், கோபத்தோடு தன்னை தன் அக்காக்களுக்கு விளக்கும் காட்சி பளிச்.
அம்மாவுக்கு பிறந்தநாள் கொண்டாடறாங்க. வீடியோ கால் மூலமா தன் அம்மாவுக்கு வாழ்த்து சொல்கிறார் ஸ்ருதி. குரலில் தழுதழுப்பு, வார்த்தைகள்ள கோபம், அப்போதும் கர்வத்தை விடாமல் பேசும் வசனம் மிகப்பெரிய பிளஸ்.
திட்டமிடவில்லை என்றாலும், கோபத்துடன் வெளியே அனுப்பி இருந்தாலும் , தன் வயிற்றில் பிறந்த அனைத்துமே தன்னில் ஒரு பகுதி தானே தாய்களுக்கு. இதைக் காட்டுகிறது கிளைமாக்ஸ் .
- ரீ-யூனியன் (Reunion)
இயக்கம்: ராஜிவ் மேனன்
பள்ளி, கல்லூரிப் பருவ நண்பன் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுக்கறாங்க ஆண்ட்ரியா. ஊரடங்குல அவங்க வீட்லயே தங்க வேண்டிய கட்டாயம். முதல்ல சமையல் பண்றது, பையன பத்தி அவங்க அம்மாகிட்ட சொல்றது அப்டினு ஜாலியா இருக்காங்க.போகப்போக இவங்களோட போதைப் பழக்கம் அவங்களுக்கு தெரிய வருது. என்ன பண்றாங்க, எப்படி சமாளிக்கிறாங்க என்பது அழகா சொல்லிருக்காங்க.
போதைப் பழக்கம் என்று தெரிந்தும், மயக்கம் அடைந்த ஆண்ட்ரியாவுக்கு மருத்துவ உதவி செய்யும் லீலா சாம்சன் காட்சிகள் மிகப்பெரிய பிளஸ்.
அந்த பழக்கத்தை மாற்ற, அம்மாவும் பிள்ளையும் ஆண்ட்ரியாவுக்கு உதவும் தருணங்கள் அழகு.
- Miracle (அதிசயம்)
இயக்கம்: கார்த்திக் சுப்புராஜ்
அதிசயம் கண்டிப்பா நடக்கும்..நம்புங்க என்று டிவி-ல சொல்றத ஒருத்தர் கேக்கறாரு. இன்னொரு பக்கம், கைல காசு இல்லாம ஊரடங்கு காலத்துல அவஸ்த பண்றாங்க பாபி சிம்ஹாவும் அவரோட நண்பரும். தனியாக விடப்பட்டிருக்கிற கார்-ல ஒருத்தர் பணம் வெச்சிருக்காரு என்று நம்பி அதை திருட போறாங்க. ஆனா பணம் எதுவுமே கிடைக்கல. கதைல அதிசயம் நடந்ததா, யாருக்கு என்ன ஆச்சு என்பது மீதி கதை.
கார்த்திக் சுப்புராஜ் பாணியில் படத்தில் வைத்திருக்கும் ஒரு ட்விஸ்ட் மிகப்பெரிய பிளஸ்.