போலீஸ்காரர்களின் வாழ்க்கை ரொம்பவே வித்தியாசமானது. ஒவ்வொருவரும் தனது வாழ்க்கையைப் பாதுகாக்க ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் மற்றவர்களின் வாழ்க்கையை பாதுகாக்க ஓடிக்கொண்டு இருக்கின்றனர்.
அதிலும், சில போலீஸ்காரர்கள் மட்டுமே செய்யும் தவறினால் நாம் ஒட்டுமொத்த போலீஸ்காரர்களையும் தவறாக நினைத்துக் கொள்கிறோம்.
ஆனால் வெகுமக்களோடு தொடர்புகொண்டு இயங்கக்கூடிய சில நல்ல காவலர்களும் இருக்கிறார்கள். இதோ அதற்குக் கண்முன்பு சாட்சியாக ஒரு சம்பவம் இதோ..கர்நாடகாவ சேர்ந்த வாலிபர் ஒருவர் பைபாஸில் விரட்டி போய்க் கொண்டிருந்தார் தனது பைக்கில்!
அப்போது சாலையில் நின்ற ஒரு போலீஸ்காரர் அவரை கை நீட்டி நிறுத்தினார். அவரும்கூட, முதலில் லைசன்ஸ் காட்டு, ஆர்..சி.புக் காட்டு எனக் கேட்பார் என்றுதான் நினைத்தார். அந்த போலீஸ்காரர் அப்படிச் செய்யவில்லை.
கையில் ஒரு மருந்து பாட்டிலை கொடுத்து, முன்னால் ஒரு அரசுப் பேருந்து போய்க்கிட்டு இருக்கு. அதுல இருந்து ஒரு பாட்டி கையில் இருந்து இந்த மருந்து பாட்டி தவறி விழுந்துருச்சு.
https://www.facebook.com/weluvcoimbatore/videos/395166164849916/?t=2
பாட்டிகிட்ட இந்த மருந்து பாட்டிலை சேர்ந்துருக்க. கொஞ்சம் ஸ்பீடா போனா பஸ்ஸை புடிச்சுடலாம். அடுத்த ஸ்டாப்பில் பஸ் நிக்கும் எனச் சொன்னார்.
உடனே அந்த இளைஞரும் பைக்கில் வேகமாகப் போய் மடக்கிப் பிடித்து மருந்து பாட்டிலை பாட்டியிடம் சேர்த்துவிட்டார். குறித்த இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ நீங்களே பாருங்களேன். இந்த போலீஸ்காரரின் செயலை நீங்களும் மனதாரப் பாராட்டுவீர்கள்.