பேருந்து படிகட்டில் ஆபத்தான பயணம்… பயணிகளிடையே காவல்துறையினர் விழிப்புணர்வு

நெல்லை மாநகரில் தனியார் பேருந்துகளில் பொதுமக்கள் அதிகமாக பயணம் செய்வதால் படிகட்டுகளில் நின்று பயணம் செய்கின்றனர் இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது இதுகுறித்து காவல்துறையினர் பேருந்து படிகட்டில் பயணம் செய்வதை தவிர்க்குமாறு பொதுமக்களிடையே அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

நெல்லை டவுன் பகுதியில் இன்று தனியார் பேருந்துகளில் படிகட்டுகளில் பயணம் செய்து வந்த பயணிகளை ஆபத்தான முறையில் பயணம் செய்வதை தவிர்க்குமாறும் இதனால் விபத்து நடைபெறுவதை தவிர்க்கலாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மேலும் அதிக பயணிகளை ஏற்றி வந்த பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர்.மேலும் இருசக்கர வாகனங்களில் மூன்று பேருக்கு மேல் பயணம் செய்த இளைஞர்களிடமும் தலைகவசம் அணிவதன் நோக்கம் இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணம் செய்ய கூடாது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Exit mobile version