பெத்தநாயக்கன் பாளையம் மாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து கொள்ளை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கோயிலில் சிலை மற்றும் கவசங்களை கொள்ளையடித்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெத்தநாயக்கம் பகுதியில் கல்லெறி பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருட்டு போய் உள்ளது. மாரியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து சிலை, வெண்கல வெண்கல கவசம், வெள்ளி வேல் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது. இதனை அறிந்த கோவில் பூசாரி மற்றும் அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பூட்டை உடைத்து கொள்ளை அடித்ததாக ராகவன் உள்ளிட்ட 3 பேரை ஏத்தாப்பூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சிலை, வெண்கல கவசம், வெள்ளி வேல் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது போன்ற கொள்ளை சம்பவங்கள் இங்கு அதிக அளவில் நடந்துவருவதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அதனால் பொதுக்கள் காவல்துறையினரை ரோந்து பணியில் ஈடுப்பட கோரிக்கை வைத்துள்ளார்.

Exit mobile version