உலகின் பல பகுதிகளிலும் வித்தியாசமான ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் தினந்தோறும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. குறிப்பாக பாலியல் தொடர்பான ஆர்வங்களில் மக்கள் செய்யும் விசித்திர வேலைகள் சில சமயங்களில் அவர்களுக்கே பேராபத்தாய் முடிந்து விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான விஷயம் நேபாளில் நடந்துள்ளது. பிளாஸ்டிக் பாட்டிலில் ஆணுறுப்பு சிக்கி கொண்டதாக ஒரு நபர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். பாட்டிலில் சிக்கியிருந்த ஆணுறுப்பை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
அந்த நபரின் ஆணுறுப்பு பாட்டிலுக்குள் அழுகிய நிலையில் இருந்தது. அவரது உடல்நிலையைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியைந்தனர். அந்த நபரின் ஆணுறுப்பு இரண்டு மாதங்களாக பிளாஸ்டிக் பாட்டிலில் சிக்கிக் கொண்டது தெரியவந்தது. இதன் காரணமாக, இரத்த ஓட்டம் ஆணுறுப்பிற்கு செல்லாததால் அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இரண்டு மாதங்களாக, அவர் இந்த விஷயத்தை யாரிடமும் கூறாமல் மறைத்து வைத்துள்ளார். ஆனால் வலி அதிகரித்த நிலையில், அவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
நேபாளத்தை சார்ந்த இந்த நபரின் வயது 45 என குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் சுய இன்பத்திற்காக பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டிலில் அவரின் ஆணுறுப்பு சிக்கிக்கொண்டதை யாரிடமும் அவமானப்பட்டுக் கொண்டு சொல்லாததால் ஆணுறுப்பிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. அவரது அந்தரங்க பகுதி அழுக நிலையில் மருத்துவர்கள் அவரது உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் நீக்கி அந்த நபரின் உயிரைக் காப்பாற்றினர். அந்த நபர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மருத்துவ நிபுணர்கள் இதுபோன்ற வழக்கை சர்வதேச அறுவை சிகிச்சை வழக்கு அறிக்கையில் வெளியிட்டனர். இந்த ஆய்வுக்கு ‘ஆண்குறி ஸ்ட்ராங்குலேஷன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் முதன்மை ஆசிரியர் பி.பி. கொய்ராலா சுகாதார அறிவியல் கழகத்தின் துர்கா நுபேன் அவர் தனது ஆய்வுக் குறிப்புகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது செக்ஸ் தொடர்பாக வித்தியாசமான முயற்சிகளை விரும்புவோர், சில விசித்திரமான விஷயங்களில் ஈடுபடுகிறார்கள்.
இதற்காக, பல பொருட்களை பயன்படுத்துகின்றனர். அப்படி தவறான பொருள்களை பயன்படுத்தும்போது அவர்களின் அந்தரங்கப் பகுதி சிக்கிய பிறகு அது அறுவை சிகிச்சை உதவியுடன் அகற்றப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.