மைலாப்பூரில் அண்ணனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த தன் தம்பியை அடித்துக்கொன்ற அண்ணன்.
மைலாப்பூரில் வசித்து வருகிறார் செந்தில் இவர் ஒரு தனியார் நிருவனத்ஹ்டில் வசித்து வருகிறார். இவருக்கு தன் அண்ணனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த செய்தி தெரியவந்ததால் இவருடைய மனைவி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் செந்தில் இரண்டாவாக ஒரு பெண்ணை கல்யாணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு குழந்தைகள் உள்ளன.
இந்த சூழலில் செந்தில் தனது தனது சகோதரன் பழனியின் மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் செந்திலுக்கும் அவரது மூத்த சகோதரர் பழனிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
நேற்று முன்தினம் இரவு செந்தில் தனது அண்ணன் மனைவியுடன் பேசி கொண்டிருந்திருக்கிறார். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த பழனி தனது தம்பி செந்திலை கண்டித்திருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பழனி அவர் தம்பியை கம்பி மற்றும் சிமென்ட் கல்லால் தாக்கியுள்ளார். இந்த சம்பவ இடத்திலேயே செந்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையில் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்றார்கள். அங்கு செந்திலின் உடலை கைப்பற்றி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதனிடையே சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி தலைமறைவான பழனியை 1 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலிசாரிடம் பழனி தன் தம்பிக்கும் தன் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும். அதை எத்தனையோ முறை கண்டித்தும் இவர் கேட்க்காததால் அவரை அடித்து கொன்றதாக கூறியுள்ளார்.