தாவூத் இப்ராஹிம் தங்கள் நாட்டில் தான் உள்ளார் என பாகிஸ்தான் கூறிய நிலையில் அதை இப்போது மறுத்துள்ளது.
பிரான்சை தலைமையிடமாக கொண்ட நிதி கண்காணிப்பு அமைப்பான FADF பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் வைத்து நிரந்தரமாக நிதி உதவி பெற தடை விதிக்கக் கூடும் என்ற அச்சம் இருந்த நிலையில், பாகிஸ்தான் 88 தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத இயக்கங்களைத் தடை செய்வதாக பட்டியலிட்டுருந்தது.
இந்த பட்டியலில் தாவூத் இப்ராகிமின் பெயரும் இடம் பெற்றதால், பாகிஸ்தானில் தாவூத் இருப்பதை அந்நாடு ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியானது. தாவூத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டது. ஆனால், இப்போது அந்த செய்தி தவறு என்றும் திசை திருப்பும் முயற்சி என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐ.நா.சபையால் தடை விதிக்கப்பட்ட தீவிரவாதிகளின் பட்டியல் அடிப்படையில்தான் பாகிஸ்தான் பிரான்ஸ் நிதி அமைப்புக்கு பட்டியல் அனுப்பியிருப்பதாகவும், அதில் தாவூத் கராச்சியில் இருப்பதாக குறிப்பிடவில்லை என்றும் கூறியுள்ளது.