கிரிக்கெட் போல பிற விளையாட்டுகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கிரிக்கெட் போன்ற மிக பெரிய பொழுதுபோக்கு விளையாட்டு வேறு எதுவும் இல்லை. இந்த உலகிலே அதிகமானவரின் மனம் கவர்ந்த விகையாட்டாக இது இருந்து வருகிறது. இந்த விளையாட்டுக்கு கிடைத்த அங்கீகாரம் மற்ற விளையாட்டுக்கும் கிடைக்கவேண்டும் என்பது பல துறையில் இருப்பவர்களின் கோரிக்கை.
இந்நிலையில் கிரிக்கெட் போல பிற விளையாட்டுகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் அனைத்து வகை விளையாட்டு வீரர்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். கபடி, கால்பந்து, ஹாக்கி, ஓட்டம் உள்ளிட்ட பல விளையாட்டுகள் சிறப்பானவை என்றும் அனைத்து விளையாட்டுகளையும் சமமாக பார்க்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.