வேலூரில் மாமூல் தர மறுத்த இறைச்சி கடை உரிமையாளரை ரவுடி கும்பல் சரமாரியாக வெட்டும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்துவச்சேரியில் கோழிக்கறி கடை நடத்தி வருபவர் சாதிக் பாஷா என்பவர். இவரிடம் பட்டப்பகலில் மூன்று பேர் மாமூல் கேட்டு அவரை தொல்லை செய்துள்ளனர். அப்போது அவர் அந்த மர்ம கும்பலுக்கு மாமுல் தர மறுத்துள்ளார். அப்போது சாதிக் பாஷா அவர்களை அந்த மர்மகும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் மிதந்த சாதிக் பாஷா உடனடியாக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நலம் குறித்து இன்றும் தகவல்கள் வெளியாகவில்லை. பட்டப்பகலில் ரவுடி கும்பல் ஆடிய வெறியாட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து கறிக்கடை சாதிக் பாஷா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மரமா கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.