பலாப்பழம் பறிப்பதில் ஏற்பட்ட தகராறு : ஒருவர் அடித்துக்கொலை… திண்டுக்கல் அருகே பயங்கரம்!!

நத்தம் அருகே பலாப்பழம் பறிப்பதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுப்பட்டி-மலையூர் பள்ளத்துகாட்டை சேர்ந்தவர் வெள்ளைக் கண்ணு (வயது 40). விவசாயியான இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கும் பலாப்பழத்தை பறிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தங்கராஜ் இன்று மறுபடியும் தகராறில் ஈடுபட்டார். அப்போது மறைந்து வைத்திருந்த கட்டையால் வெள்ளைக் கண்ணுவை அடித்து கொன்றுள்ளார்.

இது குறித்து தகவலறிந்த நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி மற்றும் போலீசார்கள் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் பிரேதத்தை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த கொலை சம்பந்தமாக தங்கராஜை உடனடியாக செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version