விஜய் நடித்த மாஸ்டர் படம் திரைக்கு வந்து 80 நாட்களை கடந்த நிலையில், இன்னும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் பலரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டியை முன்னிட்டு 13 ஆம் தேதி வெளியான படம் மாஸ்டர். கொரோனா லாக்டவுன் காரணமாக 10 மாதங்களுக்குப் பிறகு திரைக்கு வந்தாலும் வசூலில் சாதனை படைத்தது. வெறும் 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்கில் ஒரு படம் வெளியாகி ரூ.250 கோடி வரையில் வசூல் குவிப்பது என்பது எளிதான காரியமல்ல.
மாஸ்டர் படம் மட்டுமல்லாமல், படத்தில் உள்ள வாத்தி கம்மிங் பாடலும் உலகம் முழுவதும் சாதனை படைத்தது. இந்தப் பாடலுக்கு சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமல்லாமல் சாதாரண ரசிகர்கள் வரை அனைவருமே நடனம் அமைத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். ஒட்டுமொத்த சினிமா ரசிகனையும் திரையரங்கிற்கு கொண்டு வந்து சேர்த்த பெருமை தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு இருக்கிறது.
இந்த நிலையில், மாஸ்டர் படம் வெளியாகி 80 நாட்களை கடந்த நிலையில், இன்னமும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதோடு, 7 க்கும் அதிகமான திரையரங்குகளில் 17க்கும் அதிகமான காட்சிகள் வரை திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக #Master டுவிட்டர் ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. விரைவில், 100 நாட்கள் ஓடிய படங்களின் பட்டியலில் மாஸ்டர் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாஸ்டர் பட த்தைத் தொடர்ந்து விஜய், தளபதி65 பட த்தில் நடிக்கிறார். இந்தப் பட த்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். கடந்த மார்ச் 31 ஆம் தேதி பெருங்குடியில் உள்ள சன் டிவி ஸ்டூடியோவில் தளபதி65 படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது.
தளபதி65 படத்தில் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் பலரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் கவின் உதவி இயக்குநராக பணியாற்றுகிறார். அன்பு மற்றும் அறிவு ஆகியோர் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றுகின்றனர். மனோஜ் பரமஹம்சா இந்தப் பட த்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜானி மாஸ்டர் நடன இயக்குநராக பணியாற்றுகிறார். வரும் 6 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தளபதி65 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.