விஞ்ஞானிகள் மனிதன் வாழத்தகுதியான மற்றும் உயிர்கள் தோன்ற ஏதுவான இடங்கள், ஏதாவது கிரகங்களில் உயிரினங்கள் இருந்ததா என்பது குறித்த ஆராய்ச்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். நமது சூரிய மண்டலம் மட்டும் அல்லாது அண்டத்தின் வேறு பல பகுதிகளையும் ஆராய்ந்து வருகின்றனர். தற்போது அதில் ஒரு முன்னேற்றமாக உயிர்கள் தழைத்தோங்க தேவையான அடைப்படை மூலக்கூறுகள் சனி கிரகத்தின் துணைக்கோளான டைட்டனில் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
சனிக்கோளின் மிகப்பெறிய நிலவான டைட்டனில், மீத்தேனால் நிறைந்த கடல் பகுதி உள்ளது. அங்கு பூமியில் உள்ள உயிர்களுக்கு அடிப்படை மூலக்கூறான செல்களின் வெளிப்புறத்தில் Cell Membrane என்றழைக்கப்படும் சவ்வு போன்ற பொருள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். Lipids என்று அழைக்கப்படும் அவை அத்தகைய சுற்றுச்சூழலில் இருப்பது கடினம். காரணம் டைட்டனின் சுற்றுப்புறம் மைனஸ் 149டிகிரி செல்ஸியசாக இருக்கும். எனவே அங்கு தண்ணீர் திரவ நிலையில் இருப்பது கடினம் என்றும் அதேவேலை Lipidகள் தண்ணீரிலேயே தோன்றக்கூடியவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தண்ணீருக்கு பதில் மீத்தேனால் ஆன கடல்களே இருப்பதால் அங்கு Lipid அல்லாமல் வேறு மாதிரியான பொருள் இருப்பது தெரிய வந்துள்ளது.
டைட்டனின் நைட்ரஜன் சூழ்ந்த வளிமண்டலத்தில் Vinyl Cynaide எனும் வேதிப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது Lipidஐ போன்றே நிலையான மற்றும் மிகவும் நெகிழ்வான அடிப்படை மூலக்கூறுகளை உருவாக்கும் தகுதி இருப்பதும் தெரிய வந்துள்ளது.Vinyl Cynadie என்பது ஒரு கன சென்டிமீட்டருக்குள் 30மில்லியன் செல்களை உருவாக்கும் திறன் கொண்டவையாகும். அதாவது ஒரு சிறிய திறன் வாய்ந்த திசு கட்டமைப்பைக் கொண்ட உருவமைப்பை உருவாக்கவல்லது. ஆனால் Vinyl Cynaide மட்டுமே உயிர்களை உருவாக்க போதுமானதாக இருக்காது. டைட்டனின் வளிமண்டலத்தில் Carbon Chain Anion எனப்படும் கார்பன் மின்மங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இவையே உயிர்களுக்கான ஒரு விதையாகக் கருதப்படுகிறது.
ஒருவேளை கார்பன் மூலக்கூறுகளால் Vinyl Cynaideஐ அடைய முடிந்தால் அங்கு உயிர்கள் தோன்றுவதை யாராலும் தடுக்க முடியாது. வியாழனின் துணைக்கோளான டைட்டனின், நைட்ரஜன் மற்றும் மீத்தேன் நிறைந்த சவாலான சூழ்நிலைகளில் உயிர்கள் தோன்றினால் மனிதர்கள் காணும் முதல் வேற்றுகிரக உயிரினங்கள் அவைகளாகத்தான் இருக்கும். அதுமட்டுமல்லாமல் Bio Chemistry எனப்படும் உயிரி வேதியியல் துறைக்கான எல்லை எவ்வளவு என்பது இதன் மூலம்தெரியவரும் எனவும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.