பெண் விடுதலை குறித்துப் பேசிய சமூக சீர்த்திருத்தவாதி, சுதந்திரப் போராட்ட வீரர், எழுத்தாளர், கவிஞர் என பன்முக திறமைகளைத் தன்னகத்தைக் கொண்டவர் பாரதி. மகாகவி பாரதியார் 1882ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்து 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் மறைந்தார். அவர் உடல் அளவில் மறைந்தாலும் கவிதைகளால் வாழ்ந்து வருகிறார். பாரதியார் மறைந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இன்று அவரின் நூற்றாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அவரது நினைவு தினம் இனி ‘மகாகவி நாளாக’ கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பு தமிழகத்தில் வரவேற்பை பெற்று வருகிறது. பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டிற்கு சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் வாரம்தோறும் நிகழ்ச்சி அரசு சார்பில் நடத்தப்படும், உத்திரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க அரசின் சார்பில் நிதி உதவி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ் நிலத்திற்கென பெரும் கனவுகளைத் தந்துவிட்டுச் சென்ற பாரதி, தமிழறிந்த ஒவ்வொருவரிலும் வாழ்கிறார். அவரவர் துறையின் பாரதியாக முயல்வதே பெரும்கவிஞனின் நினைவைப் போற்ற ஆகச்சிறந்த வழி.அதேபோல அவரை நினைவைப் போற்றும் விதமாக வாரணாசி பனாரஸ் இந்து பல்கலை.யில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று தமிழில் பதிவிட்டிருந்தார்.
பாரதியாரின் தீவிர ரசிகனான மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ் நிலத்திற்கென பெரும் கனவுகளைத் தந்துவிட்டுச் சென்ற பாரதி, தமிழறிந்த ஒவ்வொருவரிலும் வாழ்கிறார். அவரவர் துறையின் பாரதியாக முயல்வதே பெரும் கவிஞனின் நினைவைப் போற்ற ஆகச்சிறந்த வழி” என்று கருத்து தெரிவித்துள்ளார்.