ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து அங்கு அவ்வப்போது பயங்கரவாதிகளின் ஊடுருவல் நடந்து கொண்டு இருக்கிறது.நேற்று பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை CRPF வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள பந்தா சவுக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக உள்ளூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், அங்கு விரைந்து சென்ற CRPF வீரர்களுடன் சேர்ந்து போலீசார் நேற்று இரவு அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரைக் கண்டதும் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.
தொடர்ந்து நடந்த சண்டையில் போலீஸ்காரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். ஒரு மூன்று பயங்கரவாதி கொல்லப்பட்டனர். அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.