வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் சேலை அணிந்து பங்கேற்ற மென்பொருள் பொறியாளர் சுதா சுந்தரி நாராயணன்
இந்தியா, லெபனான், கானா, பொலிவியா மற்றும் சூடான் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இதில் அழகான சேலை அணிந்து இந்திய சாப்ட்வேர் என்ஜினியர் சுதா சுந்தரி நாராயணன், அதிபர் டிரம்ப்பிடம் இருந்து அமெரிக்க குடியுரிமை பெற்றுக் கொண்டார்.
இந்திய கலாச்சாரத்தை மறவாமல் அவர் செய்த காரியம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அதிபர் டிரம்ப், சுதா சுந்தரியின் சிந்தனைகள், யோசனைகள் தகவல் தொழில்நுட்பத் துறையில் பல வளர்ச்சிகளுக்கு அடிப்படையாக இருக்கும் என்று புகழ்ந்தார். அத்துடன் அமெரிக்காவின் குடியுரிமையை பெற்றிருப்பதால் இந்த நாட்டின் சட்ட விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் டிரம்ப் அறிவுறுத்தினார்.