மோடி உட்பட இந்திய அரசியல் தலைவர்கள் பலரும், ‘உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது’ என சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். இதற்கு நியாயம் சேர்த்துள்ளது கொரோனா தடுப்பூசி மற்றும் கொரோனா கால மருந்து உற்பத்தி!
கொரோனா பெருந்தொற்று, உலக நாடுகளின் பொருளாதாரத்தை பெருமளவில் பாதித்திருந்தது, அனைவரும் அறிந்ததுதான். இந்த பாதிப்பை கூட, தங்களுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட நாடுகளில் முக்கியமானது, இந்தியா.
இதன் விளைவாக இந்தியா சில விஷயங்களை செய்திருந்தது. அதன் விளைவாக, கடந்த 2020-ஆம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து அதிக முதலீடுகளை ஈா்த்ததில் இந்தியா முன்னின்றது. 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகமாக அந்நிய நேரடி முதலீடுகளை இந்தியா ஈா்த்திருக்கிறது. கடந்த ஆண்டில் சா்வதேச அளவில் முதலீடுகள் 42 சதவீதம் அளவுக்குச் சரிவைச் சந்தித்த சூழலிலும், இந்தியாவுக்கான முதலீடுகள் அதிகரித்தன என்பது, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஒருபக்கம் முதலீடுகளை ஈா்ப்பதற்கான வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இந்தியா, மறுபக்கம் மருந்து உற்பத்தித் துறையில் தனது முத்திரையைப் பதித்திருந்திருக்கிறது. கொரோனா பரவலுக்கு முன்பே மருந்து உற்பத்தித் துறையில் இந்தியா முன்னிலை வகித்து வந்தது எனினும், நோய்த்தொற்று பரவல் காலகட்டத்தில் அதில் மேலும் சிறந்த நிலையை இந்தியா தற்போது எட்டியுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்குப் பயன்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் உள்ளிட்ட மருந்துகளை அமெரிக்கா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்தது. அதற்காக உலக நாடுகள், சா்வதேச அமைப்புகளின் பாராட்டுகளை இந்தியா பெற்றது.
கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் மனிதாபிமானத்தைப் புகுத்தத் தொடங்கியது இந்தியாதான். ஆம் நேபாளம், பூடான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை விநியோகித்தது இந்தியா. அதிலும், நாட்டு மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய ஒரு வாரத்துக்குள்ளேயே வெளிநாடுகளுக்கும் மனிதாபிமான அடிப்படையில் கரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது.
கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி நிலவரப்படி, மொத்தமாக 56 லட்சம் கரோனா தடுப்பூசிகளைப் பல நாடுகளுக்கு இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது; 1 கோடி தடுப்பூசிகள் வா்த்தக ரீதியில் வழங்கப்பட்டுள்ளன.
வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் அனைத்து நிலை மக்களுக்கும் சமத்துவமான சுகாதார வசதிகளைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே ஐ.நா.வின் நீடித்த வளா்ச்சிக்கான 3-ஆவது இலக்கு. அந்த இலக்கை மூழ்கடிக்கச் செய்யும் வகையிலும் சுயநலத்துடனும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை செயல்பட்டன.