நிலத்தடி நீருக்கு ஆபத்து… போராட்டத்தில் கிராம மக்கள்


நிலத்தடி நீரினை பாதுகாக்கக் கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் 20க்கு மேற்பட்ட கல் குவாரிகள் உள்ளன. இவை சட்ட நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு செயல்படுவதால் உள்ளூரில் நிலத்தடி நீருக்கு பேராபத்து ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே இங்கு உள்ள கல் குவாரிகளுக்கு தடை விதிக்க கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட ஏராளமான கிராம மக்கள் இன்று(13.09.21) காலை புறப்பட்டனர். சூச்சி குளம் என்ற கிராமத்தில் இருந்து புறப்பட்ட மக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அந்த கிராமத்திலிருந்தே பதாகைகளை தாங்கிப்பிடித்தும் கண்டனங்களை எழுப்பியும் விவசாயிகளும் பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Exit mobile version