தமிழகம் முழுவதும்…. 5 மணி வரை மட்டுமே – அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவை கட்டுபடுத்த நாளை முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை நான்கு மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முதல் மதுக்கடைகள் மதியம் 12 மணி முதல் 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்களை மூடவும், டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க மீண்டும் டோக்கன் முறையை அமல்படுத்தவும் முடிவு செய்துள்ளது. 4 மணி வரை மட்டுமே டோக்கன் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version