தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பட்டாசு விற்பனை தொடங்கி களைகட்டி வருகிறது. ஆனால் கொரோனா பரவல் மற்றும் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் டெல்லி, கர்நாடகா, சண்டிகர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு விற்பனை மற்றும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது தெலுங்கானாவில் கொரோன மிக வேகமாக பரவிவருகிறது. அதனால் தீபாவளியன்று பட்டாசு விற்பனை மற்றும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கும்படி மாநில அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி தீபாவளிக்காக ஏற்கனவே வாங்கிவைத்திருந்த பட்டாசுகளையும் வெடிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும், பட்டாசு விற்பனை செய்யும் அனைத்து கடைகளையும் மூட உடனடி நடவடிக்கை எடுக்கும்படி அரசுத் துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பட்டாசு விற்பனை கடைகளையும் உடனடியாக மூட காவல்துறைக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனால் ஏற்கனவே பட்டாசு வாங்கிவைத்து பொது மக்கள் வருத்தத்தில் உள்ளனர்.