மடாதிபதிகளின் கார்களுக்கு சுங்க வரி வசுலிக்க கூடாது என நிர்வாணமான போராட்டம்.
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் மடாதிபதிகளின் வாகனங்களுக்கு சுங்க வரி வசூலிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்து மடாதிபதி ஒருவர் நிர்வாணமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
திடீரென யாரும் எதிர்பார்க்காத வேளையில் ஆடைகளை கழற்றிய மடாதிபதி நிர்வாண கோலத்தில் தனது காரின் முன்பு அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டம் நடத்தினார். மடாதிபதிகள், சாமியார்கள், சாதுக்கள் பயணம் செய்யும் கார்களுக்கு சுங்கவரி வசூலிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்தார்.
மேலும் இதற்கான உத்தரவை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனிடையே மடாதிபதி நிர்வாணமாக தர்ணா போராட்டம் நடத்தி வரும் தகவல் டோல்கேட் மேலாளருக்கு கிடைத்தது. அவர் வந்து மடாதிபதியிடம் பேசி காரை அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து சுங்கச்சாவடி மேலாளர் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில் சுங்கச்சாவடிகளில் டாக்டர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்பட சிலரின் வாகனங்களுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்ககூடாது என்று தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி கழகம், மத்திய நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. மடாதிபதிகள், சாமியார்கள் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்ககூடாது என்று கூறவில்லை. இது தொடர்பாக மேலதிகாரிகளிடம் தெரிவிப்பேன் என்றார்.