விலைவாசி எக்கச்சக்கமாக உயர்ந்திருக்கும் நிலையில் மூன்று மாதங்களாக எங்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் இன்னும் எத்தனை நாட்கள் உங்கள் அரசுக்காக வேலை பார்ப்போம் என நீங்கள் நினைக்கிறீர்கள் இதுதான் புதிய பாகிஸ்தானா என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இடம் ட்விட்டரில் செர்பியாவிற்கான பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் கேள்வி எழுப்பியுள்ளது பேசு பொருளாகியுள்ளது.
செர்பியாவிற்கான பாகிஸ்தான் தூதரக ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற செய்தி வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து அனைவருக்கும் இதனை தெரியப் படுத்தும் நோக்கில் செர்பியாவிற்கான பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் பொது தளமான ட்விட்டரில் தங்களுக்கான சம்பளத்தை உடனடியாக தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ட்வீட் தற்போது வைரலாகியுள்ளது.