12 ஆண்டுகளில் இல்லாத அளவு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் டெல்லியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
டெல்லியில் கடந்த செவ்வாய் கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் அந்நகரத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, செப்டம்பர் மாதத்தில் டெல்லியில் சராசரியாக 125.1 மி.மீ. மழை பெய்துள்ளது. ஆனால், டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 112.1 மி.மீ மழை பெய்துள்ளது. இது 12 வருடத்தில் இல்லாத மழை அளவு என்பது குறிப்பிடத்தக்கது. புதன் கிழமை ஒரு நாளில் அதிகமான மழை பெய்துள்ளதால் டெல்லி நகரத்தில் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.