டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது குறித்து அவரது பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் டெல்லியில் அமைந்துள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வந்தார். அவர் தன்னுடைய பெற்றோருடன் டெல்லியிலேயே தங்கி பணிக்கு சென்று வந்தார். வழக்கம்போல இன்று பணிக்கு சென்றுள்ளார். அழகு நிலையத்தில் அவர் மின்சாரம்தாக்கி உயிரிழந்ததாக அவர் பணி புரிந்து வந்த நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அவரது உடல் அழகு நிலையத்தில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. லட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் காவலர்களிடம் குற்றம்சாட்டியுள்ளனர்.