கொரோனா மருத்துவமனையில் சுவர் இடிந்த விபத்தில் செவிலியர் பலி
திருப்பதில் கொரொனொ சிறப்பு மருத்துவமனையில் மேல் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு செவிலியர் பலியானார்.
சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்குப் பரவியுள்ள கொரொனா தொற்றால் மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்க மத்திய அரசு 54 வது கட்ட தளர்வுகளை அளித்துள்ளது இன்றுமுதல் அமலாகிறது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள திருப்பதி அரசு மருத்துவமனை அருகே கொரோனா சிறப்பு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளதால் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இன்று அதிகாலையில் கொரொம்மா தொற்றால் பாதிக்கப்பட்டவரை அழைத்துச் செல்ல ஒரு செவிலியர் வரும்போது மேற்சுவர் இடித்து விழுந்தது.
அப்போது சம்பவ இடத்திலேயே செவிலொயர் பலியானார். இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர், போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.